தூத்துக்குடி ரயில் நிலையத்தில் “ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்” என்ற அடிப்படையில்
சாந்தி பேக்கரியின்
மக்ரூன் சந்தைப்படுத்தும் ஸ்டால் திறப்பு:
நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் நடராஜன் திறந்து வைத்தார்.
பொதுமக்கள் வரவேற்பு!!
தூத்துக்குடி,
ஜூலை, 18
இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் “ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட் “என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த 16-07-2022 சனிகிழமை மாலையில் அன்று தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் சி. நடராஜன் அவர்கள் , தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் ஸ்டால்லை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி இரயில் நிலைய அதிகாரி நாதலால் மீனா – துணை வணிக மேலாளர் செண்பகராஜ் , மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இந்த மக்ரூன் ஸ்டால் 16-07-2022 முதல் 30-07-2022 வரையில மட்டும் இயங்கும். இது 15 நாட்களுக்கு ஒரு முறை சங்கிலி தொடர் போல் தொடரும் என வர்த்தக முதன்மை ஆய்வாளர் .C. நடராஜன் தெரிவித்தார் . தூத்துக்குடி மக்ரூன் என்றால் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ருன் வாங்கி செல்வது வழக்கம் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது அவசர அவசரமாக ரயில் நிலையம் வந்தாலும் கூட தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ரூன் ஸ்டால் ரயில் நிலையத்திலே இருப்பதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் இரண்டு நாட்களாக ரயில் நிலையத்தில் உள்ள சாந்தி பேக்கரி ஸ்டாலில் மக்ரூன் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களும் கூட்டம் அலைமோதியது ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட இந்த ஸ்டால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது
செய்தி தொகுப்பு
எம் ஆத்திமுத்து

