வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் மூங்கில டியில்
வர்மக்கலை முகாம்.
வேதாரண்யம் ஜூலை 17
நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் மூங்கில் குத்தடி கடைத்தெருவில் மரபு மூலிகை வைத்திய முகாம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் தேவூர் வர்ம ஆசான் கா.மோ.மணிவாசகம் தலைமை ஏற்று நடத்தினார். மரபு மஞ்சட் காமாலை வைத்தியர் ராஜ.கோவிந்தசாமி வரவேற்புரையாற்ரினார். உடல் எடை குறைய வாயமூலிகை பொடிகளை கலந்து வர்ம புள்ளிகளில் தடவி வர உடல் எடை குறையும் எனவும் தினசரி மதிய உணவில் கருணை கிழங்கு , சுரைக்காய் , வாழை தண்டு ,கீரை தண்டு , நூல்கோல் , பப்பாளி பிஞ்சு சாப்பிட உடல் எடை குறையும் எனவும் உடல் எடை பெருக்கத்தை அலட்சியமாக கருதினால் மாரடைப்பு , முல்லந் தண்டு வலி , மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் வ. சினேகா நன்றி கூறினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்று சென்றார்கள். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

