வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
வேதாரண்யம் ஜூலை 17
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் முத்துலட்சுமி தங்கவேல் நினைவாக நாகை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் 17 .7 .2022 ஞாயிற்றுக்கிழமை ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் அரசு மேல்நிலை பள்ளியில் காலை மணி 8.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது.இந்த இலவச கண் பரிசோதனை முகாமை Ln.த. சுனில்குமார் துவக்கி வைத்தார்கள் .இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் கண் அறுவை சிகிச்சை நோயாளிகள் முகாம் தினத்தன்றே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு உள்வெளி லென்ஸ் அறுவை சிகிச்சை மருந்து தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து அனைவருக்கும் இலவசமாக செய்து அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.



இந்த நிகழ்வில் ஆயக்காரன்புலம் அரிமா சங்கத்தின் தலைவர் மாதவன் செயலாளர் வைத்தியநாதன் பொருளாளர் முருகானந்தம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி, என் டி ராமஜெயம்
உடனடி முன்னாள் தலைவர் காசி பழனியப்பன் முன்னாள் தலைவர்கள் சம்பத்,L.N. இளங்கோவன் ,T.சிவானந்தம், பார்த்தசாரதி மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் வேதாரணியம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த வேதாரண்யம் அரிமா சங்க தலைவர் பாஸ்கரன் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் லாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 400 பேர் கண்களைப் பரிசோதனை செய்து கொண்டனர் .100 பேர்
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

