நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.
வேதாரண்யம் ஜூலை 14
நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர் . நேற்று மாலை 5 மணிக்கு கோடிக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதீப், ராம்குமார் , ராமலிங்கம் , கிருஷ்ணன், சுப்பையா, ராஜேந்திரா ஆகியஆறு மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான பித்ரா கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு நாகப்பட்டினம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

