வேதாரணியம் ஜூலை 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா 10.7.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .புதிய தலைவராக G.செந்தில் செயலாளராக T. கோவிந்தன் பொருளாளராக S. ராஜ்குமார் மற்றும் பல புதிய பொறுப்பாளர்கள்
பணி ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட N. மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


மண்டலம் 25-ன் துணை ஆளுநர் R. சிவக்குமார்
வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்த பணி ஏற்பு விழாவில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் வேதாரணியம் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மற்றும் வேதாரண்யம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

