வேதாரண்யம் அருகே
தென்னம் புலத்தில்
வாகனம் கவிழ்ந்து விபத்து
வேதாரணியம் ஜூலை 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த தென்னம்புலத்தில் நான்கு சக்கர சரக்கு வாகனம் ஒன்று சாலையில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது.இதில் 15 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணம் செய்த
ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களான சேகல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் ,
மணியன்,
ராமன், சதீஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .


மேலும்
சாலையில் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கரத்தில் வந்த பெண் மல்லிகா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இச்சம்பவம் குறித்து
கரியாப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

