நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் நடமாடும் இலவச காச நோய் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிபொருத்திய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூலை 4 இலவச காச நோய் ஒழிப்பு எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாதவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடமாடும் டிஜிட்டல் கருவிப் பொருந்திய வாகனத்தை நமது மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார். இந்தவாகனத்தின் மூலம் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு சென்று இலவசமாக சளி பரிசோதனை மற்றும் பரிசோதனை செய்து காசநோய் உள்ளதா என்பதை கண்டறியப்படும்.
மேலும் காசநோயளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள் ரூ.500 உதவித் தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படும். மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வும் நோய் தடுப்புமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும். நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவி மின்சார வசதி இல்லாத இடங்களில் கூட எக்ஸ்ரே எடுக்கும் நோக்கத்தில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இவ்வாகனம் மூலம் காசநோய் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டு காசநோய் இல்லா மாவட்டமாக நம் நாகப்பட்டினம் மாவட்டம் 2025 இலக்கினை அடைய அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமணை முதல்வர் விஸ்வநாதன் இணை இயக்குநர்ஜோஸ்சின் அமுதா, துணை இயக்குநர் (காசநோய்) எஸ்.சங்கீதர் மற்றும் துணை இயக்குநர் (தொழுநோய்) சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

