விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட
15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!!
தூத்துக்குடி ஜூன் 29
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட தனலட்சுமி, முத்துலட்சுமி, சின்னபொன்னு, சண்முகலட்சுமி, சந்திரசேகர், முனியம்மாள், அன்னமகாராஜா, சோலைராஜ், தங்கம்மாள,; ராமசுப்பு, லெக்கம்மாள், முருகேஸ்வரி, சோலையம்மாள், சீதாராமன், ஜெயலட்சுமி, உள்பட 15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைஞர் அரங்கத்தில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்ஏ, ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இனைந்தனர். தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பகுதி இளைஞர்அணி செயலாளர் ரவி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மற்றும் கருணா, மணி, உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.


