வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் தேசிய திறனாய்வு தேர்வில் மாவட்டத்தில் பள்ளி மாணவி முதலிடம்.
வேதாரண்யம் ஜூன் 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி (முஸ்லிம்) மாணவி ஆஷிகா
தேசிய திறனாய்வு தேர்வில் நாகை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தோப்புத்துறை சின்ன பள்ளிவாசல் தெரு சாகுல் அமீதுவின்
மகளாவார்.
இந்தத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.இந்தத் தேர்வை இந்த வருடம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.
இந்த தேசிய திறனாய்வு தேர்வில் (NMMS) தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி(முஸ்லிம்) மாணவி ஆஷிகா 121 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் போது மாதம் ரூபாய் 1000 வீதம் பெறுவார்கள்.இந்தத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அஷிகாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை ஆர்வலர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பாராட்டி வருகின்றனர் .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.


