நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாகப்பட்டினத்தில் 1வது புத்தகதிருவிழா 24.06.22 தொடங்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தெனனிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து நடத்தும் புத்தக திருவிழா நடைப்பெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவானது 24.06.2022 தொடங்கி 04.07.22 வரை நடைபெறுகிறது. புத்தகதிருவிழாவில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அனைத்துவகையான புத்தகங்கள் தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை கல்லூரி பள்ளி மாணவமாணவிகளின் கலைநிகழ்சிகளும் தமிழ் அறிஞர்களின் கருத்தரங்ககளும் சிந்தனையரங்கம் போன்ற நிகழ்சிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான நேற்று பள்ளிக் கல்லூரி மாணவமாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிகொள்கைகுழு துணைத்தலைவர் முனைவர். ஜெயரஜ்சன் அவர்களின் தமிழகப் பொளாதராரம் நேற்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திரு. ஐ. லியோனி அவர்களின் நிறைவான வாழ்வை தீர்மாணிப்பது பட்டறிவே படிப்பறிவே என்ற தலைப்பில் கருத்தரங்கமும் இன்றையதினம் 27.06.2022 பாரதிபாஸ்கர் தலைமையில் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நாளை 28.06.2022 மாலை திரு. எஸ். ராஜா அவர்களின் தலைமையில் புத்தகங்களை நாம் வாங்குவது வாசித்து மகிழவே வாழ்க்கையில் பின்பற்றவே என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெறஉள்ளது.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.


