வேதாரண்யத்தில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
வேதாரணியம் ஜூன் 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வடக்கு வீதி மேல வீதி சந்திப்பில் சிறப்பாக நடந்தது.
இந்த கூட்டத்திற்கு வேதாரண்யம் திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான மா.மீ.புகழேந்தி தலைமை ஏற்கவும் G.பிரபு வரவேற்புரை ஆற்றவும் தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் சிறப்புரை ஆற்றவும்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம், தலைமைக் வழக்கறிஞர் சீ.க. மறைமலை
பொதுக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி சதாசிவம் நகர்மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி, வேதாரணியம் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நகர கழக நிர்வாகிகள் வார்டு பிரதிநிதிகள்,நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டு பேசியவர்கள் அனைவரும் கலைஞரின் பெருமைகளையும் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் வி திருக்குமரன் நன்றி உரையாற்றினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.


