நாகையில் முதலாவது புத்தக திருவிழா
நாகை ஜூன் 24
நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாகப்பட்டினம் மாவட்டநிர்வாகம் மற்றும் தெனனிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து முதலாவது புத்தக திருவிழாவை நடத்துகின்றனர்.
இதன் தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், நாகை எம்.எல்.ஏ முகமதுஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த புத்தக திருவிழாவானது இன்றைய தினம் தொடங்கி 04.07.22 வரை நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.
தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகளும் தமிழ் அறிஞர்களி;ன் கருத்தரங்குகளும் சிந்தனையரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக கருதப்படுகிறது. இந்த புத்தக திருவிழானது மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்களிடயே சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகிறது. ஒரு புத்தகமானது மனிதனுடைய வாழ்வியலை தெரிவிக்கும் விதமாக உள்ளது. நம் வாழ்வில் நாம் முன்னேறி செல்வதற்கும் நம் வாழ்க்கையை சிந்தனையும் அறிவையும் வளர்த்து கொள்வதற்கு உதவியாக மட்டும் அல்லாமல் நமக்கு ஒரு நண்பனாகவும் விளங்குகிறது. புத்தகங்களின் மீது ஒரு அன்பு வர வேண்டும். படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தக கண்காட்சியை பொதுமக்கள் அணைவரும் கண்டுக் களித்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர்கள் முருகேசன் (நாகப்பட்டினம்) ஜெயராஜ் பௌலின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), இராமன், நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, தென்இந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


