நாகை, கீழையூர், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை ஜூன் 24
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழையூர், தலைஞாயிறு ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முட்டம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் நீர் உறுஞ்சும் குழி அமைக்கும் பணிகளையும், பாலையூர் ஊராட்சி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மயான திடலில் மரகன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், தேமங்கலம் ஊராட்சியில் ஊறுஞ்சும் குழி அமைக்கும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணி நடைப்பெறுவதையும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணிகளையும்,; ரூ.2.87 லட்சம் மதிப்பீட்டில் சங்கநதிகுளம் அம்ரிட் சர்வோவர்அமைக்கும் பணியினையும்,ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் அம்ரிட் சர்வோவர் குளம் அமைக்கும் பணியினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நீர் உறிஞ்சுகுழி அமைக்கும் பணியினையும், ரூ.7.64 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டதட்டை ரெட்டைகுளம் புனரமைப்பு செய்தல் பணியினையும்,; கருங்கண்ணி ஊரட்சியில் அம்ரிட் சர்வோவர் குளம் அமைக்கும் பணியினையும், பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகளையும், பிரதாபராமபுறம் ஊராட்சியில் வேல்டுவிஷன் தொண்டு நிறுவணத்தின் சார்பில் ஏரி அமைக்கும் பணியினையும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நர்சரி கார்டன் அமைக்கபட்ட பணிகளையும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நாலுவேதபதி ஊரட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நர்சரி கார்டன் அமைக்கும் பணி, மற்றும் ரூ.2.லட்சம் மதிப்பீட்டில் சமுதாய பண்ணை குட்டைஅமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்


