• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு

policeseithitv by policeseithitv
June 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு

நாகை ஜூன் 15

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஷாகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். மேலும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் எடுத்துக் கொண்டனர். மேலும் முதியோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகப் பதாகையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் தமீமுன்னிசா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்

Previous Post

தூத்துக்குடியில் திமுக நிர்வாகி ஜெகன் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய பொதுச்செயலாளர் துரைமுருகன்.!

Next Post

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Next Post
நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In