கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு – மாணவா்களுக்கு இனிப்புகள், பூக்கள் கொடுத்து வரவேற்பு
நாகை ஜூன் 14
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் 1-முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து நாகூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார்;.
பின்பு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்ததாவது:
மாணவர்களுக்கு பள்ளிகள் சரியான நேரத்தில் துவங்கின்றன. தமிழகஅரசு கூறியது போல இந்தாண்டு கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள் தரப்படும். அதற்கான எல்லா வாய்ப்புகளையும் பள்ளி கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாகாலத்தில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் வழியில் பாடங்களை கற்றனர். கொரோனா குறைந்து உள்ளதால் நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்பிற்கு வராமல் இருந்ததால் அவர்களுக்கு நிறைய மாற்றங்கள் இருக்கும் அதனை எல்லாம் இந்தாண்டு சீர்செய்து நல்ல ஒழுக்கமான குழந்தைகளாக வளரவேண்டும். மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலத்திலேயே ஆசிரியாகள், பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டுகொண்டு நல்ல குடிமகனாக வளர இந்த பள்ளி காலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளிகளில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பது மட்டும் இல்லாமல் தினம்தோறும் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் அன்றைய பாடத்தை அன்றே படிக்க வேண்டும். படிப்பு சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் பள்ளியில் புதியதாக மாணவர் சேர்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது மட்டும் இல்லாமல் மாணவர்கள் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

