வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின்
திருவுருவ சிலை திறப்பு விழா
வேதாரணியம் ஜூன் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்து உள்ள கரியாப்பட்டினம் ஊராட்சியில் புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரும் திமுக பிரமுகருமான முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் த.சரவணமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திரு உருவச் சிலையை
திறந்து வைத்து மரக்கன்றுகள் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கௌதமன்,
வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம், வேதாரணியம் நகர்மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி,
வேதாரணியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை,ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், சரவணமுத்து குடும்பத்தினர், நண்பர்கள், கிராமவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.எழிலரசன் சரவணமுத்து நன்றி உரையாற்றினார்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

