நாகை நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு
நாகை ஜூன் 10
நாகப்பட்டினம் நகராட்சிகுப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் இயக்குநர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், நகரமன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மகாலெட்சுமி நகர் பகுதியில் ரூ 1.67 கோடி மதிப்பீட்டில் மண் சாலைகளை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியினையும், ஆசாத் மார்கெட் ரூ 2.23 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகளையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்துநிலையம் விரிவாக்க பணிகளையும், ரூ 5.30 கோடி மதிப்பீட்டில் அக்கரைகுளம் செல்லும் வழியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதையும், காடம்பாடி, பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதிகளியில் ரூ 12 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கூக்ஸ் ரோடு பகுதியில் குப்பபைகளை கொண்டு இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நுண்உரகுடில், நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரிக்கும் பணிகள் நடைபெறுவதையும் நகராட்சி நிர்வாகம் இயக்குநர் பொன்னையா பார்வையிட்டுஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்;, மண்டல பொறியாளர், நகராட்சி ஆணையர்கள், நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் இயக்குநர் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவீந்திரன் மண்டல பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர்கள் ஸ்ரீதேவி, ஹேமலதா நகராட்சி பொறியாளர்கள் ஜெயகிருஷ்ணன், முகமது இப்ராகிம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

