வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான சமுதாய கூடம் திறப்பு விழா.
வேதாரணியம் ஜூன் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை கோடியக்காடு ஊராட்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் நிதி ஒரு கோடி மதிப்பிலான கீழ் தளம் மற்றும் மேல் தளம் கொண்ட சமுதாயக்கூடம் 8.6.2022 காலை 10 மணிக்கு முன்னாள் பன்னாட்டு இயக்குனர் ஜி ராமசாமி
அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேல் தளத்தை பன்னாட்டு இயக்குனர் சம்பத் அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பன்னாட்டு இயக்குனர் தேர்வு மதனகோபால் 324F
மாவட்ட ஆளுநர் செளமா ராஜரத்தினம் ,கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி,முன்னாள் கூட்டு மாவட்டத்தின் தலைவர் பிரதிவி குமார்,முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் முகமது ரபிக்,வேதநாயகம், ராஜகோபால்,பிரேம், விட்டோ பிளாக்கா,
ராஜன் சீனிவாசன், முரளி ,குப்புசாமி, ரமேஷ்குமார், சேது குமார்,திரு நாராயணன், வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு,
கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி,
துணைத் தலைவர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வேதாரணியம் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கோடியக்காடு கோடியக்கரை கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

