வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டம்.
வேதாரண்யம் ஜூன் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை தாங்கினார்
அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் மற்றும் வேதாரணியம் நகர செயலாளர் வக்கீல் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ் குமார் செயலாளர் ஆனந்தராஜ் பொருளாளர் முருகானந்தம்,அதிமுகவை சார்ந்த சிவசண்முகம், பாபு, திலீபன், A1.மாரியப்பன் மற்றும் ஏராளமான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.இறுதியில் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

