சமத்துவபுரம் வீடுகள் பழுதுநீக்கம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
நாகை ஜூன் 3
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை, பாப்பாகோவில், பனங்குடி ஆகிய பகுதியில் சமத்துவபுரம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான வீடுகள் புனரமைப்பு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.
திருக்குவளையில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவரின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து திருக்குவளை வட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ரூபாய் 488.84 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான புனரமைப்பு வீடுகள் பழுதுநீக்கம், குடிநீர் பணிகள், சாலை பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்காக சமத்துவபுரத்தில் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் திருக்குவளையில் இருந்து மன்னார்குடிக்கு புதிய வழித்தடத்தில் புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். வாழக்கரை ஊராட்சியில் ரூபாய் 23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திற்கும், பாப்பாகோவில் சமத்துவபுரத்தில் 47.06 லட்சம் புதிய வீடுகள் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அவுரித்திடலில்; நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப்போரட்ட தியாகிகள், தமிழறிஞர்கள் மற்றும் மொழிப்போர் காவலர்களின் நிரந்தர புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் திறந்து வைத்து பார்வையிட்டார் மற்றும் மாவட்ட ஆட்;சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.82,92,156 மதிப்பீட்டில் 136 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.



நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி, கீழையூர் ஒன்றிய குழுத் தலைவர் செல்வராணி ஞானசேகரன், வட்டார அட்மா குழுத் தலைவர் எடிசன், நாகை ஒன்றிய குழுத் தலைவர் அனுசியா, நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மகேந்திரகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், திருக்குவளை, பாப்பாகோவில், பணங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

