வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலயதிரு தேர்பவனி
வேதாரணியம் ஜூன் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலய
திருத்தேர் பவனி 1.6.2022 அன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெண்டை மேளத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.முதலில் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.திருத்தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று பிறகு தேவாலயத்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து இங்கிஈவன்ஸ் இன்னிசை ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளை பங்குத்தந்தை Rev.Fr.
G. பன்னீர்செல்வம் புனித காணிக்கை அன்னை அருட்சகோதரிகள்,புனித அந்தோணியார் அன்பியம் பக்த சபை இறைமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த
திருத்தேர் பவனியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு
புனித லூர்து மாதா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளையும் அன்பையும் ஆசியையும் நிறைவாகப் பெற்று சென்றனர்.




செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

