நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு பாரதபிரதமர் நிவாரணநிதி திட்டத்தின் கீழ் கொரோனா நோய்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காணொளிகாட்சி வாயிலாக இன்று (30.05.2022) நடைபெற்றது.
நாகப்பட்டினம் மே 30
பாரதபிரதமர் நிவாரணநிதி திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.1000000- நிவாரணநிதி வழங்குவதற்கான நிகழ்ச்சி மாண்புமிகு பாரதபிரதமர் அவர்களால் காணொளிகாட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.05.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிகழக தலைவர் என்.கௌதமன் தாட்கோ தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் .இரா.மாரிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.


நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த கொரோனாதொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது நிறைவடையும் போது ரூ.1000000 பெறும் வகையிலான ஸ்நேஹபத்திரம் இ அஞ்சலக கணக்கு புத்தகம் இ ஆயுஷ்மான் அட்டை மற்றும் ஒவ்வொரு குழந்தைக்குமான பாரதபிரதமர் அவர்களின் தனிகடிதம் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் க.மதிவாணன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கணேசன் குழந்தைகள் நலக்குழுதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர்கள் அரசுத்துறை அலுவலர்கள் குழந்தைகள் இல்லநிர்வாகிகள்இ குழந்தைகள் மற்றும் காப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

