வேதாரண்யம் கடற்கரையில் அம்மன் சிலை.
வேதாரணியம் மே 30
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் திடீரென்று அம்மன் சிலை இருந்தது.
வேதாரண்யத்தில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது கடலில் அலைகள் ஆர்ப்பரித்தது. இந்தநிலையில் திடீரென கடல் உள்வாங்கியது. இதையடுத்து கடற்கரை பகுதி சேறாக காணப்பட்டது. இந்த சேற்றில் 3 அடி உயரம் கொண்ட சிமெண்டால் ஆன அம்மன் சிலை இருந்தது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடற்கரையில் உள்ள பூங்காவை சுற்றி பார்க்க வந்தவர்கள்இந்த சிலையை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடற்கரையில் இருந்த அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் குடமுழுக்கின் போது பழைய சிலைகள் கடலில் விடுவது வழக்கம். அதேபோல் குடமுழுக்கு நடந்த கோவிலில் இருந்து இந்த சிலை கடலில் விடப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது.கடற்கரையில் இருந்த இந்த சிலையால் வேதாரண்யத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

