நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்
நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் 27.05.2022 அன்று நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மே 27
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம்
திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டில்
நடைபெற்றுவரும் சிறு பாலம் கட்டும் பணியினையும், அங்கு நரிமேனி
ஆறு குறுக்கே பாலம் அமைப்பதற்காகவும், தெத்தி ஊராட்சியில்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமரச நகர்
அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற 0 முதல் 6 வயது ஊட்டச்சத்து
குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை
முகாமினையும், அங்குள்ள அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும்
பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி
ஊராட்சி புதுக்கடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதையும், அங்கு பிரதம மந்திரி வீடு
கட்டும் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வீடு கட்டும் கட்டுமானப்
பணிகளையும், நாகூர் வெட்டாற்றுப்பாலம் சீரமைக்கும் பணியினையும்
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
பெ.பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது
ஷா நவாஸ் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர்
ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தி,
பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

