வேதாரண்யத்தில் தியாகி. க.வைரப்பனாரின் 116 வது பிறந்த நாள் விழா
வேதாரண்யம் மே 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சுதந்திர போராட்ட தியாகி க.வைரப்பனாரின் 116 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் வேதாரணியம் ரோட்டரி கிளப் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது.காலை 10 மணி அளவில் தியாகி நினைவு ஸ்தூபியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேதாரண்யம் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திற்கு வந்தடைந்தது.வேதாரணியம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் இருந்த தியாகி வைரப்பனாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பாலசுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமை ஏற்கவும்
சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் வரவேற்பு உரை நிகழ்த்தவும்,நாகரத்தினம் அமைப்புச் செயலாளர்
பூபதி மாவட்ட துணைத்தலைவர்,புகழேந்தி மாவட்ட துணைச் செயலாளர் முன்னிலை வகிக்கவும்
சிறப்பு அழைப்பாளர்களாக கயிலை மணி அ.வேதரத்தினம் அறங்காவலர் கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம்,
அ.கேடிலியப்பன் ரோட்டரி கிளப் சாசனதலைவர் வேதாரணியம் ரோட்டரி கிளப் தலைவர் புயல் குமார் மற்றும் தியாகி வைரப்பனார் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.இதில் நாகை நகரம், ஒன்றியம் வேதாரணியம் நகரம்,ஒன்றியம் தலைஞாயிறு ஒன்றியம் கீழையூர் ஒன்றியம் கீழ்வேளூர் ஒன்றியம் திருமருகல் ஒன்றியம் மற்றும் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.





இறுதியில் மாவட்ட பொருளாளர் ஜெயராமன் நன்றி உரை நிகழ்த்தினார்.இறுதியில் தியாகி. க.வைரப்பன் குடும்பத்தினர் சார்பில் வைர சண்முகசுந்தரம் வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் நடந்த ரத்ததான முகாமில் 45 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

