நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கினை மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்
திரு அர சக்கரபாணி அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரணியம் மே 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்துகிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கினைமாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு அர. சக்கரபாணி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணைக்கிணங்க நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோவில் பத்து ஊராட்சியில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன்
கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்து திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்டத்தைப் பொருத்தவரை குருவையில்சுமார் 40 ஆயிரம் மெ.டன் சம்பாவில் 1.30 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டு 1.20 லட்சம் மெ.டன் இருக்கிறது .



வருகின்ற காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்கின்ற வகையில் இரண்டு வழிமுறைகளை கையாள இருக்கிறோம் குறிப்பாக தேவைப்படும் இடங்களில் அங்கு சிமெண்ட் தரை தளம் மற்றும் மேலே சிமெண்ட் சீட் கூரை அமைத்து சிமெண்ட் செட் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக வருகின்ற 25ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.இனிமேல் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்கின்ற நெல்களை நேரடியாக தனியார் அரிசி ஆலை முகவர்களுக்கே அனுப்பி வைத்து அதை அவர்களே சேமித்து வைத்து அரைத்து தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கிறார்கள்.அதற்கான முன் மதிப்பீடு வருகின்ற இருபத்தி ஐந்தாம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்
மேலும் கோயில்பத்து சேமிப்பு கிடங்கிற்கு உள்ளே வாகனம் செல்வதற்கு சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு அர. சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாய்வின் போது நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் செயற்பொறியாளர் முத்துவேல் உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன் மேலாளர் தரக்கட்டுப்பாடு தியாகராஜன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் வேதாரணியம் வட்டாட்சியர் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

