திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நாகை மே 22
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடைத்தெருவில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி, தலைஞாயிறு ஒன்றிய மற்றும் பேரூா் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைஞாயிறு ஒன்றியக் கழகச் செயலாளர் மகாகுமார் தலைமையில் நடந்தது. பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் கௌதமன், தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, கவிஞர் ஆதித்தியன், மாநில விவசாய அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.கே.வேதரெத்தினம், முன்னாள் தலைமை கழக வழக்கறிஞர் மறைமலை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், இராஜேந்திரன், மேகநாதன், வேதை பொதுக்குழு உறுப்பினர்,மா.மீ. அன்பரசு வீரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



மேலும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் துரைராஜ், பழனியப்பன், அருள், பாரிபாலன், புவனேஸ்வரி, சத்தியமூர்த்தி உட்பட திமுக துணைச் செயலாளா்கள், பொருளாளா்கள், மாவட்டக் கழக பிரதிநிதிகள், சார்பு அணி துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளா்கள், பேரூா் வார்டு செயலாளா்கள், ஒன்றிய பிரதிநிதிகள், இளைஞரணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

