நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
வேதாரணியம் மே 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் வேதாரணியம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வைரவன்,நகர துணைத் தலைவர் அர்ஜுனன், வட்டாரத் தலைவர் ஜெகநாதன்,
காங்கிரஸ் வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் உசேன், காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட துணைத்தலைவர் ரபிக் , INTUC உப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர்
தாயுமானவன், மற்றும் வெங்கட் ,
மகிளா காங்கிரஸ் நகர தலைவர் ரத்னமாலா,மகளிர் அணி சார்பில் தமயந்தி , செல்வராணி,
காங்கிரஸ் இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஆப்கான்,வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை,எல்ஐசி பாலகிருஷ்ணன்,ஊடகவியலாளர் சபரி ராம்,டெல்லி குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸார் கலந்துகொண்டனர்.இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

