வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது
வேதாரணியம் மே 8
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சிறப்பு கூட்டுத் திருப்பலி ஏ குழந்தைசாமி இயக்குனர் கலங்கரை நிறுவனம் நாகப்பட்டினம்,ச.ஜான் கென்னடி பங்குத்தந்தை,D.நித்திய சகாயராஜ் தாளாளர் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேதாரணியம் இவர்கள் தலைமையில் நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய அடைக்கல அன்னை சொரூபம் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறையினர் மருத்துவத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

