தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பாக ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (06.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.*

*♻️அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், பெண்கள் நம் சமூகத்தின் ஆணிவேர் ஆவார்கள். தற்போது பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் சிறந்த சாதனையளர்களாக உள்ளனர். பெண்கள் குடும்பத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வது மட்டுமல்லாது தாங்களும் நன்றாக படித்து சமுதாயத்தில் உயரிய பதவியிலும் இருக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து இன்றுவரை சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். எந்த பெண்களும் முதலில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் முடியும் என்று நினைக்க வேண்டும். தைரியமாக முன்வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவர்கள் சாதனையளர்களாக மாற முடியும். பெண்கள் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை முற்றிலும் கை விட வேண்டும். கல்வி ஒன்றுதான் உங்களை வாழ்க்கையில் சாதனையாளர்களாக மாற்றும்.*
*♻️மேலும் பெண்கள் தங்களது செல்போன்களுக்கு வரும் முகம் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம். மேலும் சமூக வளைதளங்கிளில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் சுய விவரங்களை பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் என்றால் தைரியமாக காவல்துறையிடம் புகாரளிக்க முன் வரவேண்டும். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விளையாட்டில் எப்படி விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றி பெற முடியுமோ அதே போல் வாழ்க்கையிலும் சில விதிமுறைகளை கடைபிடித்து நமது குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.*
*♻️இந்நிகழ்வின் போது வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், தூத்துக்குடி நகர தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.*

