விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.*
*♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் இன்று (06.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் வழ வேம்பார் சாலையில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் விளாத்திகுளம் ஜமீன் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் தங்கமாரியப்பன் (52) என்பதும் அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி தங்கமாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.*
*♻️இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

