நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
நாகை மே 2
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.25 லட்சத்து 31ஆயிரத்து 850 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏக்கள் நாகை முகமதுஷாநவாஸ், கீழ்வேளுர் நாகைமாலி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி ஒரு நபருக்கு ரூ.78,850 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைத்தல் என மொத்தம் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,28,850 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூகபாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.18,000 மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதியோர் உதவித் தொகை மற்றும் விதவை உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகையினையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.20,70,000 மதிப்பீட்டில் கடன் உதவியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.1,45,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்பீட்டில் விதவை மறுமணம், கலப்புத் திருமணத்திற்கான தேசிய வைப்புத்தொகைக்கான பத்திரம் என 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.25 லட்சத்து 31 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.


முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின் பாலகத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் சமூக பாதுகாப்பு துணைஆட்சியர் ராஜன், சமூக நல அலுவலர் தமீமுன்னிசா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

