உப்பு சத்தியாக்கிரகம் 92 ஆண்டு நினைவு நாள்- தியாகிகள் , காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளினர்.
வேதாரணியம் ஏப்ரல் 30
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று 92 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி
அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் தியாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். மலர்தூவி மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக
தியாகிகள் சர்தார் வேதரததினம், வைரப்பன்,சுப்பையா பிள்ளை ஆகியோர் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக கட்டிடத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை குருகுலம் அறக்கட்டளை கயிலைமணி வேதரத்தினம் மற்றும் அவரது சகோதரர் கேடிலியப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேண்டு வாத்தியங்கள் உடன் புறப்பட்ட பேரணி வடக்கு வீதி, கீழ வீதி,மணியன் தீவு வழியாக உப்பு சத்தியாகிரக நினைவு ஸதூபியில் நிறைவடைந்தது.. தொடர்ந்து அகஸ்தியம்பள்ளியில் உள்ள சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் மாநில காங்கிரஸ் கமிட்டிதலைவர் கே. எஸ். அழகிரி , தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு,பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்,பி.வி.ராஜேந்திரன், சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பேரன் வேதரத்தினம்.கேடிலியப்பன் மற்றும் தியாகிகள் காங்கிரஸ் கட்சியினர் ஸ்தூபிக்கு முன்பு உப்பு அள்ளி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றிற்கு அதிக வரி விதித்ததால் மட்டுமே அனைத்து பொருட்களும் விலை ஏறிவிட்டது.காங்கிரஸ் கட்சி மக்களை மையப்படுத்துகிற அரசியல் கட்சி ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ பாசிச அரசாங்கம் அவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள்.அதனுடைய விளைவு இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அதைவிட விளிம்புநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் அனைத்து மக்களும் சிரமப்படுகிறார்கள்.கலால் வரியால் தான் பெட்ரோல் ,டீசல் விலை அதிகமாகி இருக்கிறது இதை நினைவுபடுத்துவதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியிலிருந்து பாதயாத்திரையாக வேதாரணியம் வரை வந்துள்ளோம். என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.


இந் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ஸ்ரீவல்ல பிரசாத்,பாராளுமன்ற உறுப்பினர்விஷ்ணு பிரசாத் ,பொன் கிருஷ்ணமூர்த்தி,வேதாரணியம் காங்கிரஸ் நகர தலைவர் வைரவன் துணைத்தலைவர் சாரட் என்ற அர்ஜுனன் ஐ.என்.டி.யூ.சி தங்கமணி, தாயுமானவன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

