உப்பு சத்தியாக்கிரக 92வது நினைவு தினத்தையொட்டி பாதயாத்திரை குழுவினர் தியானம்.
வேதாரணியம் ஏப்ரல் 29
ஆங்கிலேயர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரக போராட்டம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் கடந்த 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் தமிழக முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையிலான குழுவினர் பாதயாத்திரையாக நேற்று வேதாரண்யம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். பாதயாத்திரை குழுவினர் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிடத்தில் இன்று தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். தியானத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஜோதி கணேசன்,திருவாரூர் சக்தி செல்வகணபதி, தஞ்சை கணேசன், சென்னை ஞானவேல், கடலூர் நிசார் அகமது ,எடப்பாடி பாண்டு, திருவாரூர் துரைராஜ்,மருங்காபுரி நல்லதம்பி திருச்சி தர்மராஜ், கரூர் லியோ சதீஷ், சூளை ராமலிங்கம், தர்மபுரி சித்தன் அரியலூர் மாரியம்மாள். ,ஜீவா,புஷ்பா, லதா,உமா மகேஸ்வரி ,தர்மபுரி சித்தன்சாமி, உள்ளிட்ட பாதயாத்திரை குழுவினருடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு தலைமையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, வேதாரண்யம் குருகுலம் அறக்கட்டளை கயிலைமணி வேதரத்தினம், வேதாரண்யம் நகர காங்கிரஸ் தலைவர் வைரவன், நகர துணைத்தலைவர் அர்ஜுனன்,
காங்கிரஸ் வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் உசேன் ,
காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட துணைத்தலைவர் ரபிக்
மகளிர் அணி சார்பில் பஞ்சநதிக்குளம் பஞ்சாயத்து தலைவர் சத்யகலா செல்வராணி
INTUC உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன் , காங்கிரஸ் இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஆப்கான்,தகவல் தொழில் நுட்ப அணி விக்னேஸ்வரன்,பிராந்தியங்கரை செந்தில் உள்ளிட்டோர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை மற்றும் தியாகி வைரப்பன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இன்று மாலை பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

