வேதாரண்யத்தில் கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
வேதாரணியம் ஏப்ரல் 26
நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து
கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு நான்கு பிரதான வீதிகள் வழியாக
வந்து மீண்டும் ராஜாஜி பூங்கா வந்தடைந்தது.
இந்த பேரணியை வருவாய் கோட்டாட்சியர் துரை முருகன்
கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா , செம்போடை ஆர். வி பொறியியல் கல்லூரி மாணவர்கள், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர் .

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

