வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு .
வேதாரணியம் ஏப்ரல் 25
திருக்குர்ஆன் அருளப்பெற்ற மாதமான புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம்.வேதாரண்யம் எஸ். எஸ் அறக்கட்டளை சார்பில் பல ஆண்டுகளாக நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. 24.04.2022 மாலை வேதாரண்யம் சர்வ கட்டளை இஸ்லாமியர்கள் தொழுகைக் கூடத்தில் நோன்பு துறப்பு நிகழ்வு எஸ்.எஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், தோப்புத்துறை ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் எஸ். எஸ் அறக்கட்டளை தலைவர் லயன்.எஸ்.எஸ்.தென்னரசு வரவேற்றார். லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் வேதநாயகம், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, தோப்புத்துறை ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் தலைவர் ஐ. நவாஸ்தீன் , முகமது ஷாபி, பி. எஸ்.ரகமத்துல்லா , ஆர். இ.எம்.ரபீக், ஷேக் அகமதுல்லா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

