உலக புத்தக நாளை ஒட்டி 70 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்.
நாகப்பட்டினம் ஏப்ரல் 23
உலகம் முழுதும் ஏப்ரல் 23ம் தேதி புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி நாகையை சேர்ந்த நாளை” அமைப்பு உலகப் புத்தக நாள் நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள 70க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வாசிப்பையும், சுற்றுச்சூழல் உணர்வையும் மேம்படுத்த நக்கீரன் எழுதிய “பசுமைப் பள்ளி” என்ற நூலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

