வேதாரண்யத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
வேதாரணியம் ஏப் 19
நாகை மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர். நகரப் பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் வனத்துறையினர் எனஅனைவருக்கும் ஒய்வூதியம் ரூ 7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த தர்ணா ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், இராசமாணிக்கம், மாவட்ட இணைச் செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம், மகளிரணி ஜெயலட்சுமி , மாவட்ட தலைவர் நடராசன், வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

