விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருட்கள் சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு வந்த TN 05 AY 2490 என்ற Tata காரில் அரசால் தடை செய்யப்பட்ட 218 கிலோ புகையிலை பொருட்கள் 18 சாக்குப் பைகளில் இருப்பது தெரியவந்தது.
எதிரி சங்கர் வயது 36
த/பெ காசிநாதன் அனந்தபுரம்
என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.2,18,000 மதிப்புள்ள 218 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரியின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது.

