அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் – தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.
வேதாரணியம் ஏப்ரல் 05
தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் இரா. இந்திரசித்தன் தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்றது.வட்டார செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அளவில் உள்ள பொதுக் குழு நிர்வாகிகள் பேசினர்.மாவட்ட செயலாளர் புயல்.சு. குமார் தீர்மானங்கள் குறித்து விளக்கமாக பேசினார்.

மேலும் 1 முதல் 12 வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி மேற்படிப்பு படிக்க மாதந்தோறும் 1,000 ரூபாய் அரசால் வழங்கப்பட்ட விருக்கும் திட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளையும் சேர்க்க வேண்டும் எனவும் , அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட சில படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் சேர்த்து இட ஒதுக்கீட்டை தமிழக அரசு10 சதவீதமாக வழங்க கோரியும் , சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதெனவும் , மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ள உயர்கல்விக்கான 6% ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் கொண்டுவர தமிழக அரசை கேட்டுக் கொள்ளவதெனவும், வேதாரண்யத்தில் அமையவிருக்கும் வட்டார கல்வி அலுவலகக் கட்டிடத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்பொதுக் குழுக்கூட்டத்தில்மாவட்ட பொருளாளர் அ.மதியரசு, சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் அ.முரளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலமேகம் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

