*தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.*
???? *தருவைகுளம் காவல் நிலைய கடற்கரை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் பீச் வாலிபால், பீச் கபாடி, பீச் புட்பால் ஆகிய போட்டிகள் கடந்த 26.03.2022 ஆம் தேதி விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.கடந்த 9நாட்களாக நடந்த விளையாட்டு போட்டிகள் இன்று சிறப்பாக நிறைவடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.*
???? *இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் திரு.T. V. பேட்ரிக், திரு.அந்தோணி ரவிகாந்த் உடற்கல்வி ஆசிரியர்,தருவைகுளம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம், தருவைகுளம் உதவி ஆய்வாளர் திரு. சரவணன், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


