கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.
வேதாரணியம் மார்ச் 26
கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் மண்டபம் முகாமிலிருந்து கோடிக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து ஹோவர்கிராப்ட் அதிகாரிகளிடம் கேட்டபோது வழக்கமான ரோந்து பணிக்காக வந்திருப்பதாகவும், கோடிக்கரையில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். தினந்தோறும் காலை ,மாலை வேளைகளில் கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை அகதிகள் தமிழகத்திற்கு வருவது தொடங்கியிருக்கிறது. இரு தினங்களுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகளை இதேபோன்று ஹோவர்கிராப்ட் மூலம்தான் மீட்டு மண்டபம் முகாமிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

