???? *விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது – வாகனம் பறிமுதல்.*
???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.L. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.*
???? *இந்நிலையில் நேற்று காவலர்கள் புதூர் டு அருப்புக்கோட்டை செல்லும் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த TN39AC0882 TATA 407 VAN என்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ய நிறுத்தியபோது அதிலிருந்து டிரைவர் மற்றும் ஒருவர் காவலர்களை பார்த்ததும் ஓடியுள்ளார். சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தின் உள்ளே சோதனை செய்த பொது அதில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக கடத்தி வந்துள்ளனர். கடத்தலுக்கு துணையாக இருந்த கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமர்பாண்டி மகன் ராஜா(28) என்பவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.*
???? *சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாகனத்தை விரைவாக பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.*

