கோடியக்கரை கடற்கரையில் திடீர் சுழல்காற்றுமீன் வலைக் கட்டுகள் பறந்தன -மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்..
வேதாரணியம்
மார்ச் 24
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி படகு துறைமுகம் அருகே கடல் பகுதியில் இருந்து ஒரு சுழல் காற்று வருவது தெரிந்தது.கடற்கரைப் பகுதியில் இருந்த மீனவர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மீண்டும் கரை அருகே வந்தபோது சுழற்காற்றின் வேகம் அதிகரித்தது .எடை குறைந்த பொருட்கள் மட்டுமல்லாமல் 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை கட்டுகளும் பறந்து மேலே இழுத்துச் செல்லப்பட்டு சுழன்று விழுந்தது. இந்நிகழ்வை தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். மீன் ஏற்றுவதற்காக கடற்கரையில நின்றிருந்த சரக்கு வாகனம் ஒன்றும் சுழல்காற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி குலுங்கி, குலுங்கி ஆட்டம் கண்டது.

ராகு கேது பெயர்ச்சியின்போது கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் என்று சில ஜோதிடர்கள் தெரிவித்து இருந்த நிலையில் இதுபோன்ற நிகழ்வு கோடியக்கரை பகுதி மக்களிடையே ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

