கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.
வேதாரணியம்
மார்ச் 20
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பைபர் படகு மட்டும் கரை ஒதுங்கியுள்ளது.தகவலறிந்த கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின்பேரில் ராமசுப்பிரமணியன், செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கியூ பிராஞ்ச் போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

