நாகையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் நாகை சங்கமம் நிகழ்ச்சி ஒரு வாரம் நடக்கிறது
வேதாரண்யம் மார்ச் 18
நாகை மாவட்டத்தில் 75-வது சுதந்திரதிருநாள் அமுதப் பெருவிழா மற்றும் நாகை சங்கமம் என்ற பெயரில் ஒருவார காலம் 20.03.2022 முதல் 27.03.2022 வரை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத்துறை, மகளிர் திட்டம், மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக அவரவர்களுக்கென தனித்தனியாக ஒதுக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள அறிந்தும் அறியாத நிலையில் உள்ள தியாகிகளின் படங்களை பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் வைக்கவும், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சிகளை மையப்படுத்திடவும், மீண்டும் மஞ்சள் பைகளை பொதுமக்கள் வாங்கி செல்வதற்கு ஏதுவாக குறைந்த விலையில் மஞ்சள் பை விற்பனை செய்திடவும், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள், மாரத்தான் ஓட்டம் நடத்திடவும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை சிறப்பித்திடவும், நாதஸ்வரம், வயலின், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையிலும், குழந்தைகள் விளையாடுவதற்கான கண்காட்சிகளை ஏற்பாடு செய்திடவும், அமுதப் பெருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் பொதுமக்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்திடவும், அதிக அளவில் அரங்குகள் அமைத்து அதில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்திடவும், 20ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை ஒரு வாரம் காலம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கு துறைவாரியாக அனைத்து துறை அரசு அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் அனைத்துதுறைஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

