கோடிக்கரையில் 375 கடல் ஆமை குஞ்சுகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கடலில் விட்டார்.
வேதாரணியம்
மார்ச் 18
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் கடல் ஆமை முட்டை பொரிப்பகம் உள்ளது. டிசம்பர் மாதம் முதல் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடல் ஆமைகள் முட்டை இடும். இரவு நேரங்களில் கடலோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும் வனத்துறையினர் முட்டைகளை சேகரித்துக் கொண்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர். 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் ஆமை முட்டைகள் ஆமைக் குஞ்சுகளாக வெளிவருகிறது. கடல் ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடப்படுவது வழக்கம். கடலில் உள்ள பாசிகளையும் , சிறிய மீன்களை உணவாக கொள்ளும் ஜெல்லி மீன் களை கடல் ஆமைகள் உண்பதாலும் மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடிக்கரையில் 65 ஆமைகளின் முட்டைகள் 6 ஆயிரத்து 976 முட்டைகளும், ஆறுகாட்டுத்துறை 7 ஆயிரத்து 346 முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மூன்று ஆமை இட்ட முட்டைகளில் இருந்தும், ஜனவரி 21ம் தேதி ஒரு ஆமை இட்ட முட்டைகளில் இருந்தும் என 4 ஆமைகள் இட்ட முட்டைகளில் இருந்து 375 ஆமைக் குஞ்சுகள் இன்று அதிகாலை வெளிவந்தன . அதை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோர் ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். இந்நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா , வனச்சரக அலுவலர் அயூப் கான் , மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.. கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் ஆழ்கடலை நோக்கி கடலுக்குள் வேக வேகமாக நீந்திச் சென்றது.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

