வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு.
வேதாரணியம்
மார்ச் 16
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மறைஞாயநல்லூர் ஸ்ரீ வேதநாயகி அம்மன் சமேத ஸ்ரீ மேலமறைக்காடர் ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது .வேதநாயகி, விநாயகர், முருகன், நடராஜர், மகாலட்சுமி, நவகிரகம் , பைரவர் என 14 புதிய ஆலயங்கள் புரைமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை யாக கால பூஜை தொடங்கி இன்று நான்காம் கால பூஜை நிறைவுற்று இன்று காலை கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானங்களின் கும்பங்களுக்கும் இன்று காலை ஒரே நேரத்தில மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை சென்னை மகாலெட்சுமி டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் நிதியுதவியோடு நடத்தப்பட்டது.


கும்பாபிஷேகத்தை காண வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

