அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் மார்ச் 11
கடந்த மாதம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும், நூறு வேலை திட்ட பணிகளை 8 மணிக்கு ஆரம்பிப்பதற்கு பதில் 10 மணிக்கு துவங்கிடவும் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரண்யம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமையில் நடந்தது.
இதில் இந்திய கம்யூ. கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் ,நாகப்பட்டினம் பாரளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட 300 பேர் ராஜாஜி பூங்காவிலிருந்து ஊர்வலமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
நாகப்பட்டினம்.

