தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையும்.
- தமிழ்நாடு சைபர் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி ஒடிசாவை பூர்வீகமாக கொண்டவர். (2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்). இவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் பிரிவிலேயே டிஜிபியாக தொடர்கிறார். சைபர் கிரைம் பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
- எம்.ரவி (ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளார், தற்போது தாம்பரம் காவல் ஆணையராக உள்ளார்) இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வுப் பெற்று தாம்பரம் காவல் ஆணையராக தொடர்கிறார். இதற்கு ஏற்ப தம்பரம் காவல் ஆணையரகம் டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
- ஜெயந்த் முரளி (சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக உள்ளார்) இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபியாக தொடர்கிறார். இதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
- கருணாசாகர் (அயல்பணியில் டெல்லியில் பணியாற்றுகிறார்) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அயல்பணியில் தொடர்கிறார்.
தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெறும் 1991 பேட்ச் 4 அதிகாரிகளுடன் சேர்த்து 16 டிஜிபிக்கள் தமிழகத்தில் உள்ளனர்

